ஆசிரியர் பாடமே எடுப்பதில்லை..! : கோவையில் கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

published 2 years ago

ஆசிரியர் பாடமே எடுப்பதில்லை..!  : கோவையில் கலைக்கல்லூரி  மாணவர்கள் போராட்டம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் புவியியல் துறை பேராசிரியர் கடந்த ஆறு மாதமாக பாடம் எடுப்பதில்லை என்று கூறி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை அரசு கலைக்கல்லூரியில் புவியியல் துறை செயல்பட்டு வருகிறது இந்த துறையில் பேராசிரியராக இருப்பவர் பாத்திமா. இவர் கடந்த ஆறு மாதங்களாக மாணவர்களுக்கு பாடம் எடுப்பது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

மேலும் ஆசிரியர் முறையாகப் பாடம் எடுப்பது இல்லை என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா கூறுகையில், "கடந்த 6 மாதமாக பேராசிரியர் பாடம் எடுக்காமல் உள்ளார்.  விரைவில் செமஸ்டர் தேர்வுகள் துவங்க உள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் வகுப்புக்கு வருவதில்லை. அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். மேலும் கோவை அரசு கலைக் கல்லூரிக்கு வரும் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe