சிங்காநல்லூரில் விபச்சாரம்: மீட்கப்பட்ட இளம் பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு

published 1 year ago

சிங்காநல்லூரில் விபச்சாரம்: மீட்கப்பட்ட இளம் பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவை: கோவை சிங்காநல்லூரில் வீட்டில் விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இளம்பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

சிங்காநல்லூர் கே.பி.ஆர். லே-அவுட்டைச் சேர்ந்த 51 வயது நபர் அங்கு மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையில் இருந்தார். அப்போது அங்கு பெண் உட்பட 2 பேர் வந்தனர். 

அவர்கள் மளிகைக்கடைக்காரரிடம் எங்களிடம் அழகான இளம்பெண்கள் உள்ளனர். நீங்கள் பணம் கொடுத்தால் இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்கலாம். நாங்கள் அந்த வீட்டிற்கு அழைத்து செல்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மளிகைக்கடைக்காரர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து காவல் துறையினர் பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய பெண் புரோக்கர் சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்த மோனல் (41) மற்றும் குனியமுத்தூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி (24) ஆகிய 2 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

அங்கிருந்த இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe