கோவை சிறுமுகையில் அஞ்சு அடி நீள அரிய வகை நாகம் சிக்கியது

published 1 year ago

கோவை சிறுமுகையில் அஞ்சு அடி நீள அரிய வகை நாகம் சிக்கியது

கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (48), விவசாயி. சம்பவத்தன்று இவரது வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் தொட்டியில் கொடிய விஷமுடைய பாம்பு ஒன்று சுற்றி திரிந்தது.

இதுகுறித்து பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடி வீரரான காஜா மைதீனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து குடிநீர் தொட்டியில் இருந்த 5 அடி நீளமுள்ள அரிய வகை நாகத்தினை லாவகமாக பிடித்தார்.

பின்னர் அந்தப் பாம்பினை சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின்படி வனப்பகுதியில் விட்டார். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் பாம்பு பிடி வீரரால் பிடிபட்ட நாகம், அரியவகை பொறி நாகம். இது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டது என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe