கோவையில் 7 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை.. தாயின் இரண்டாவது கணவர் வெறிச்செயல்..

published 1 year ago

கோவையில் 7 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை.. தாயின் இரண்டாவது கணவர் வெறிச்செயல்..

கோவை: கோவையில் 7 வயது சிறுவனுக்கு காலில் சூடு வைத்த தாயின் இரண்டாவது கணவர் குறித்து முதல் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவை கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சுல்தான் இப்ராஹிம். இவரது மனைவி சர்மதா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த முசாதிக் என்பவர் ஏற்கனவே திருமணமாகி மனைவி இறந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவைக்கு வந்து இங்கேயே தங்கி ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

அப்போது முசாதிக் கிற்கும் சர்மதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து சர்மதா முதல் கணவரை பிரிந்து முசாதிக்கை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு உக்கடம் புல்லுக்காடு பகுதியில் வசித்து வருகிறார்.

7 வயது சிறுவனும் சர்மதாவுடனே வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி அச்சிறுவன் பள்ளிக்கு செல்லவில்லை எனக் கூறி முசாதிக் தோசை கரண்டியால் சூடு வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தனது மகனை பார்க்க வந்த சர்மாதாவின் முதல் கணவர் இப்ராஹிம் மகனின் காலில் இருந்த காயத்தை பார்த்து இது குறித்து மகனிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த சிறுவன் முசாதிக் தனது காலில் சூடு வைத்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர் தனது மகனுடன்  கடைவீதி காவல் நிலையத்திற்கு சென்று முசாதீக் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலிசார் முசாதிக்கிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe