கோவையில் வெளி மாநில தொழிலாளர்களுக்கான மண்டல ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

published 1 year ago

கோவையில் வெளி மாநில தொழிலாளர்களுக்கான மண்டல ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

கோவை: கோவை மண்டல அளவிலான வெளி மாநில தொழிலாளர்களுக்கான மண்டல ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வெளி மாநில தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனைகள், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகை மற்றும் அவர்களுக்கு உள்ள சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மண்டலங்களில் கூடுதல் ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் இன்று கோவை, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, குன்னூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் கோவை மண்டல அளவிலான இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மாநில அமைப்புகளைச் சேர்ந்த  பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், தொழிற்சாலை உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டனர். 

மேலும் சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த  தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த  கூடுதல் இயக்குனர்கள் சிறப்பு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர் நலக் கூடுதல் ஆணையர்  குறிப்பிட்ட கால இடைவெளிகளில்  கூட்டம் நடத்தி ஒவ்வொரு காலண்டிற்கும் ஏற்படும் முன்னேற்றம் குறித்த அறிக்கையை தொழிலாளர் நல ஆணையரிடம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe