வால்பாறையில் கரடி தாக்கி முதியவர் படுகாயம்

published 1 year ago

வால்பாறையில் கரடி தாக்கி முதியவர் படுகாயம்

கோவை: வால்பாறை அருகே உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருபவர் அய்யப்பன் (57). இவர் நேற்று இஞ்சிப்பாறை எஸ்டேட் கீழ் டிவிசனில் செடிகளுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்தார். 

அப்போது திடீரென செடிக்குள் மறைந்திருந்த கரடி இவரை தாக்கியது. படுகாயம் அடைந்த இவரை சக தொழிலாளர்கள் உடனடியாக மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வனத்துறையினர் சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe