கோவையில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறித்த இளம் பெண் கைது

published 1 year ago

கோவையில் மூதாட்டிகளை குறிவைத்து செயின் பறித்த இளம் பெண் கைது

கோவை: கோவை மாவட்டம் கோட்டூரில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர் மலையாண்டி பட்டிணத்தைச் சேர்ந்த பழனாத்தாள் (வயது 75), அதே பகுதியைச் சேர்ந்த சிவபாக்கியம் (65), துளசியம்மாள் (75) ஆகிய மூதாட்டிகளிடம் 13 பவுன் செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

செயினை பறிகொடுத்த மூதாட்டிகள் இது குறித்து கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் இளம் பெண் ஒருவர் வயதான மூதாட்டிகளை குறி வைத்து செயினை பறிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து அந்த பெண்ணை காவல் துறையினர் தேடி வந்தனர். நேற்று அவரை கோட்டூர் காவல் துறையினர் கைது செய்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த கவுதமி (வயது 34) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 13 பவுன் நகைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் காவல் துறையினர் கவுதமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe