கோவையில் இருவேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

published 1 year ago

கோவையில் இருவேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சத்யா(40). சம்பவத்தன்று இவர் தனது ஸ்கூட்டரை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு வெளியூர் சென்றார். பின்னர் நேற்று கோவை திரும்பினார்.

வீட்டுக்கு சென்று பார்த்த போது தனது ஸ்கூட்டரை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்து சத்யா ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்கூட்டரை திருடிய நபரை தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் பிரதீப்(19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் பிரதீப் கல்லூரி முன்பு பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி வந்தார். அப்போது பைக்கை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து பிரதீப் அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe