கோவையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.. ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

published 1 year ago

கோவையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.. ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

 கோவை: கோவையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை கணபதி ராஜீவ்காந்தி ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ்(31). இவரது மனைவி ரேவதி(28). இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ரேவதி கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

 இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ரேவதி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த சரவணம்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe