கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேருந்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

published 1 year ago

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பேருந்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

கோவை: கோவை செல்வபுரம் கருப்பையா நகரை சேர்ந்தவர் லட்சுமி(57). கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு கடைவீதி பேருந்து நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் செல்வபுரம் சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்து சென்றுள்ளார். 
 

இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe