நொய்யல் ஆற்றில் நுரை ததும்பும் ரசாயன கழிவுகள்

published 1 year ago

நொய்யல் ஆற்றில் நுரை ததும்பும் ரசாயன கழிவுகள்

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் இருந்து பட்டண பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள நொய்யல் ஆறு செல்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி கோவை திருப்பூர் ஈரோடு வழியாக கரூர் மாவட்டம் காவிரி  கலக்கும் 172 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ஆற்றில் குப்பை பிளாஸ்டிக் கழிவு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள் உள்ளிட்டவை அடிக்கடி கலக்கின்றன. 

அதே போன்று தற்போதும் தொழிற்சாலையில் பட்டறைகளில் இருந்து சாயம் ஆயில் உள்ளிட்ட ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு ஆற்றில் கலக்கிறது. 

இதன் காரணமாக ஒண்டிப்புத்தூர் நெசவாளர்காலனியில் இருந்து பட்டணம் பகுதி செல்லும் வழியில் உள்ள அணைக்கட்டில் நொய்யல் ஆறு சாக்கடை கழிவால் கருமை நிறமாக காட்சியளிக்கிறது. மேலும் இராசயனங்களால் நுரை ததும்பி செல்கிறது. 

இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe