கோவையில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது

published 1 year ago

கோவையில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்தவர் 31 வயது இளம்பெண். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர்.

சம்பவத்தன்று எனது 3 வயது மகள் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது எங்களது வீட்டின் அருகே வசிக்கும் 16 வயது சிறுவன் எனது மகளை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு வைத்து அவர் எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். எனது மகள் சத்தம் போடவே சிறுவன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் எனது மகள் அழுதபடியே வீட்டிற்கு வந்தார். என்ன நடந்தது என்று கேட்ட போது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

எனவே எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார்.

புகாரின் பேரில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe