வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக.. 17.85 லட்ச ரூபாய் மோசடி

published 1 year ago

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக.. 17.85 லட்ச ரூபாய் மோசடி

கோவை: ஜெயங்கொண்டம் அருகே உள்ள விருதாச்சலம் ரோடு பகுதியை சேர்ந்தவர்  ரவிச்சந்திரன் ( 56 ).  இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோடு சேரன் நகர் பகுதியில் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சியை அணுகி வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கேட்டு வந்தார்.

அப்போது அந்த ஏஜென்சி நிர்வாகி ஜோஸ்வா (34) என்பவர் கனடா உட்பட பல்வேறு நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் . பணம் தந்தால் வெளிநாடு அனுப்பி பெரிய நிறுவனத்தில் பணியாற்ற வைத்து விடுவோம் என கூறினார்.

 இதைக்கேட்ட ரவிச்சந்திரன் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு கட்டங்களாக 17.85 லட்ச ரூபாய் கொடுத்தார்.  பணத்தை வாங்கிய ஜோஸ்வா வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் ஆர்எஸ் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe