கோவையில் மாணவனை கீழே தள்ளி இறக்கி விட்ட அரசு பேருந்து கண்டக்டர்..

published 1 year ago

கோவையில் மாணவனை கீழே தள்ளி இறக்கி விட்ட அரசு பேருந்து கண்டக்டர்..

கோவை: கோவையில் மாணவனை கீழே தள்ளி இறக்கி விட்ட அரசு பேருந்து டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை உசிலம்பட்டி பாலுசாமி நாடார் தெருவை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவரது மகன் மோகன் பிரபு(17). பிளஸ்-டூ படித்து முடித்து விட்டார்.

இவர்களது உறவினர்கள் கோவையில் இருப்பதால், மோகன் பிரபுவை கோவை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க அவரது பெற்றோர் விரும்பினர். இதற்காக மோகன் பிரபு கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்காக நேற்று முன்தினம் கோவை வந்தார்.

பின்னர் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் செல்வதற்காக அரசு பேருந்து எண் 1 சி-யில் ஏறினார். அப்போது கண்டக்டர் மாணவனிடம் பேருந்து சிங்காநல்லூர் செல்லாது, ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும், அங்கிருந்து சிங்காநல்லூர் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

அதற்கு மாணவன் அப்படி என்றால், பேருந்து தகவல் பலகையை ஏன் மாற்றாமல் வைத்துள்ளீர்கள், அதில் சிங்காநல்லூர் என்று போடப்பட்டுள்ளதே என கேள்வி எழுப்பினார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த பஸ் கண்டக்டர் மாணவனை தகாத வார்த்தைகளால் பேசினார். பின்னர் பேருந்தை நிறுத்தி எழுந்து வந்த டிரைவர் மாணவனை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க்கில் கீழே தள்ளி இறக்கி விட்டு சென்றார்.

இதில் மாணவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் மாணவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மாணவன் மோகன் பிரபு ஆர்.எஸ்.புர்ம போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் அரசு பஸ் டிரைவர் ஆனந்த கிருஷ்ணன், பஸ் கண்டக்டர் சுரேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe