கோவையில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

published 1 year ago

கோவையில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கோவை: கோவையில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் தனிகா (20). இவருக்கும் கோவை பீளமேடு ராஜூ நாயுடு லே-அவுட்டை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

 இந்நிலையில் நேற்று முன்தினம் தனிகா வீட்டில் யாரும் இல்லாத போது, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பினர்.

 அவர் குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 மேலும் தன்காவுக்குத் திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe