கோவையில் பேருந்து நிறுத்த அறிவிப்பான் பொருத்தப்பட்ட பேருந்தில் பயணித்த அமைச்சர்கள்

published 1 year ago

கோவையில் பேருந்து நிறுத்த அறிவிப்பான் பொருத்தப்பட்ட பேருந்தில் பயணித்த அமைச்சர்கள்

கோவை: கோவையில் GPS பேருந்து நிறுத்த அறிவிப்பான் பொருத்தப்பட்ட பேருந்தில் அமைச்சர்கள் பயணித்தனர்.

முதியவர்கள், கண் பார்வையற்றவர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பொழுது பேருந்து நிறுத்தங்களை அறிவதற்கு GPS மூலம் பேருந்து நிறுத்தத்தை அறிவிக்கும் கருவிகள் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி கோவையில் முதல்கட்டமாக 65 பேருந்துகளுக்கு இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதனைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். 

மேலும் அப்பேருந்தில் பயணம் மேற்கொண்ட அமைச்சர்கள் அந்த வசதிகளைப் பரிசோதித்தனர். 

சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து, சிவானந்தா காலனி வரை பயணம் மேற்கொண்ட அவர்கள் ஒலி அறிவிப்பான் கருவி சரியான முறையில் இயங்குவதைப் பரிசோதித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe