கோவையில் பணம் கேட்டு மிரட்டி தொழிலாளியைத் தாக்கிய வாலிபர்..

published 1 year ago

கோவையில் பணம் கேட்டு மிரட்டி தொழிலாளியைத் தாக்கிய வாலிபர்..

கோவை: கோவையில் பணம் கேட்டு மிரட்டி தொழிலாளியைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் மேட்டூரைச் சேர்ந்தவர் கண்ணன் (45), கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு போத்தனூரில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு 16 வயது சிறுவன் உட்பட 4 பேர் வந்தனர். அவர்கள் கண்ணனிடம் பணம் கேட்டு மிரட்டினர். 

அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து அவரை தாக்கி அவரது செல்போனை பறிக்க முயன்றனர். 

ஆனால், கண்ணன் செல்போனை பறிக்க விடாமல் பிடித்துக் கொண்டார். தொடர்ந்து 4 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

 தாக்குதலில் காயமடைந்த கண்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்த புகாரின் பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். 

இதில், கண்ணனிடம் பணம் கேட்டு மிரட்டி செல்போனை பறிக்க முயன்றது போத்தனூர் குருசாமி பிள்ளை கோயில் தெருவைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி யுகேந்திரன்(18) உள்ளிட்டோர் என்பது தெரியவந்தது.

 போலீசார் யுகேந்திரனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மற்ற 3 பேர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe