கோவையில்  நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில்  நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில்  நாளை (ஜூன் 15) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் ஜூன் 15ம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாளை சரவணம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிகள்:

சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி புதூர், 

மணியகாரம்பாளையம் (ஒரு பகுதி), லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, ஹவுஸிங் யூனிட் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மனி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல் : தமிழ்ச்செல்வன் செயற்பொறியாளர் கு.வடமதுரை

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe