கோவையில் முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு

published 1 year ago

கோவையில் முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு

கோவை: கோவை தலைமை வெரைட்டி ஹால் ரோடு பகுதியை சேர்ந்தவர் தயாநிதி. இவரது மனைவி மசக்காரணி (வயது50). சம்பவத்தன்று இவர் ராஜ வீதி வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் முகவரி கேட்டார். அப்போது மசக்காரணி முகவரியை கூறிக்கொண்டிருந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் மசக்காரணி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச்சென்றார்.

இதுகுறித்து அவர் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe