கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கிய மருத்துவர் தற்கொலை

published 1 year ago

கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கிய மருத்துவர் தற்கொலை

கிரெடிட் கார்டை பயன்படுத்தி கடன் பெற்ற மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனியார் அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் கோகுல்நாத்(33). மருத்துவரான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். 

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி வீட்டில் சொல்லிவிட்டு வெளியே சென்ற அவர் ஒரு நாள் முழுவதும் திரும்பி வராத நிலையில் நேற்று சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 இது குறித்து ஹோட்டல் நிர்வாகிகளால் அவரது வீட்டிற்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சிங்காநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற  காவல்துறையினர் கோகுல்நாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோகுல்நாத் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வங்கியில் கடன் பெற்றதாகவும் அந்தக் கடனை அடைக்க முடியாமல் பல நாட்களாக விரக்தி இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe