வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் 7-வது முறையாக கைது செய்யப்பட்ட போதை ஆசாமி

published 1 year ago

வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் 7-வது முறையாக கைது செய்யப்பட்ட போதை ஆசாமி

கோவை : போலீஸ் கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் இரவு செல்போனில் ஒரு நபர் தொடர்பு கொண்டார். 

அப்போது பேசிய அவர்  ஒரு குழந்தையின் உடலில் தான் வெடிகுண்டை பொருத்தி உள்ளதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என கூறி செல்போனை துண்டித்து விட்டார். 

இதனையடுத்து கட்டுப்பாட்டு அறை போலீசார் அவரின் செல்போன் எண் வைத்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் கோவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவை மாநகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

போலீசார் நடத்திய விசாரணையில் மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கோவைப்புதூர் அருகே உள்ள சுகுணாபுரம் செந்தமிழ்நகரை சேர்ந்த பீர் முகமது (44) என்பது தெரியவந்தது. அவர் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

 இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பீர் முகமது ஏற்கனவே 6 முறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைத செய்யப்பட்டு உள்ளார்.

 தற்போது அவர் 7-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
___________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe