வேலை தேடி கோவைக்கு வந்தவரிடம் செல்போன் பறிப்பு

published 1 year ago

வேலை தேடி கோவைக்கு வந்தவரிடம் செல்போன் பறிப்பு

கோவை: கன்னியாகுமரியில் இருந்து வேலை தேடி கோவை வந்த வாலிபரிடம் செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி தக்கலையை சேர்ந்தவர் சுஜித்(21). 

ஐடிஐ எலட்ரீசியன் படித்துள்ளார். இவர் கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவருடன் தங்கி எலக்ட்ரீசியன் வேலை பார்ப்பதற்காக நேற்று கன்னியாகுமரியில் இருந்து ரயிலில் கோவை வந்தார். பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் வெள்ளலூர் சென்றார். 

அங்கு பிள்ளையார்புரம் மாசாணியம்மன் கோயில் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென சுஜித்தின் செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றார். 

இது குறித்து சுஜித் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில், செல்போன் பறித்தது பிள்ளையார்புரம் மாசாணியம்மன் கோயில் தெருவை சேர்ந்த நாகராஜ்(34) என்பது தெரியவந்தது. 

போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe