சிட்கோ அருகே சந்தன மரம் வெட்டி கடத்தல்!..

published 1 year ago

சிட்கோ அருகே சந்தன மரம் வெட்டி கடத்தல்!..

கோவை : கோவையில் அரசு வளாகங்கள், குடியிருப்புகளில் சந்தனமரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இதனை மர்ம நபர்கள் அவ்வப்போது வெட்டி கடத்தி செல்வது வாடிக்கையாக உள்ளது.

இதேபோல், கோவை சிட்கோ எல்ஐசி காலனி 3வது தெருவை சேர்ந்தவர் ஆனந்த பத்மநாபன்(45). ஐடி ஊழியர். 

இவர் தனது வீட்டு வளாகத்தில் சந்தன மரம் வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நைசாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சந்தனமரத்தை வெட்டி கடத்தி சென்றுள்ளனர்.

 மறுநாள் காலையில் எழுந்த ஆனந்த பத்மநாபன் சந்தன மரம் கடத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

உடனே அவர் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe