பேருந்துக்கு வழிவிடுவதில் மோதல் கண்டக்டர் மீது தாக்குதல்!..

published 1 year ago

பேருந்துக்கு வழிவிடுவதில் மோதல் கண்டக்டர் மீது தாக்குதல்!..

கோவை: கோவையில் பேருந்துக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட மோதலில் கண்டக்டரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(26). இவர் கடந்த 5 ஆண்டுகளாக தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

 இந்நிலையில், பிரகாஷ் நேற்று பணியில் இருந்தார்.

 அப்போது காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் பிரகாஷ் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது மற்றொரு தனியார் பஸ்சை ஓட்டி வந்த புலியகுளத்தை சேர்ந்த டிரைவர் பிரதாப்(23), என்பவர் பஸ்சை குறுக்காக போட்டு தகராறு செய்தார். 

அப்போது பிரகாசுக்கும், அவர்களுக்கும் இடையே வழி விடுவது தொடர்பாக தகராறு எழுந்தது. 

இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த டிரைவர் பிரதாப், வால்பாறையை சேர்ந்த கிளீனர் அருண்(27), மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த கண்டக்டர் விக்னேஷ்(29), ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரகாசை தாக்கினர். 

இது குறித்து பிரகாஷ் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் கண்டக்டரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர் பிரதாப், கிளீனர் அருண், கண்டக்டர் விக்னேஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe