தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை தீயணைப்பு நிலையத்தில் மீட்புப்பணி சாதனங்கள் காட்சிப்படுத்தல்

published 1 year ago

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை தீயணைப்பு நிலையத்தில் மீட்புப்பணி சாதனங்கள் காட்சிப்படுத்தல்

கோவை:
தென் மேற்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் பேரிடர் கால மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் சாதனங்கள்  காட்சிப்படுத்தப்பட்டன. தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புபடையினரின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள்  எவ்வாறு தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

மேலும் பேரிடர் காலத்தின் போது மீட்பு பணியின் போது பயன்படுத்தப்படக்கூடிய  உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  உபகரணங்களின் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேபோல் வெள்ளத்தின் போது ஆபத்துக் காலங்களில்  வெள்ளத்தில் மிதந்து வரும் பொருட்களை எவ்வாறு மிதவையாக பயன்படுத்தி தப்பலாம் என்பது குறித்து காட்சிப்படுத்தப்பட்டது.
_________

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe