கோவை சிறையில் உள்ள யுவராஜை சந்தித்த முக்குலத்தோர் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர்

published 1 year ago

கோவை சிறையில் உள்ள யுவராஜை சந்தித்த முக்குலத்தோர் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர்

கோவை: கோவை மத்திய சிறையில் இருக்கும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனத் தலைவர் யுவராஜை
இன்று முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர்  சரவணண் சந்தித்தார்.

முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரவணண் இன்று கோவை மத்திய சிறையில் இருக்கும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனத் தலைவர், யுவராஜை, சந்தித்தார் முன்னதாக சிறைவாயிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

யுவராஜ் விஷயத்தில் அவருக்கு முறையான நீதி அமையவில்லை, தவறான நீதி வழங்கப்பட்டுள்ளது.
சாட்சிகள் பிறள் சாட்சியாக உள்ளது.

நாங்கள் யுவராஜ்க்கு உறுதுணையாக இருப்போம், உச்ச நீதிமன்றம் சென்று நீதிக்கு போராடுவோம் என்றார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேகநாதன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்  இளையராஜா, திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில், மற்றும் முக்குலத்தோர் சட்ட பாதுகாப்பு மையத்தின் தலைவர் பசும்பொன் முத்து, தென்னாடு மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செந்தில் வாண்டையார், மற்றும் நிர்வாகிகள்  இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe