கோவை சரக காவல் துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம்..!

published 1 year ago

கோவை சரக காவல் துறை அதிகாரிகளுடன்  சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம்..!

கோவை

 


கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கோவை காவல் சரகங்களான கோவை, நீலகிரி, திருப்பூர் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த காவல் அதிகாரிகளுடன்  சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், நான்கு மாவட்டத்திலுள்ள சட்டம், ஒழுங்கு  சம்பந்தப்பட்ட விஷயங்கள், காவல் துறையின் செயல்பாடுகள், களத்தில் காவல்துறையினர் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர்,  கோவை  திருப்பூர்  மாநகர காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள் திருப்பூர் , கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  .


இதில் தற்கொலை செய்துகொண்ட 
கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உருவப்படத்திற்கு ஏடிஜிபி அருண் மற்றும் காவல் துறை அதிகாரிகள்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe