தொண்டாமுத்தூர் அருகே பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி

published 1 year ago

தொண்டாமுத்தூர் அருகே பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி

கோவை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் சுகுமார் (43). இவர் கோவை தொண்டாமுத்தூர் நரசீபுரத்தில் தங்கியிருந்து பிளம்பரராக வேலை பார்த்து வந்தார்

இந்நிலையில், நேற்று இரவு சுகுமார் வஞ்சிமாநகரிலிருந்து தொண்டாமுத்தூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவரது பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த சுகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe