டி.ஐ.ஜி தற்கொலை விவகாரம் : கோவையில் யுடியூபர்களிடம் விசாரணை..!

published 1 year ago

டி.ஐ.ஜி தற்கொலை விவகாரம் : கோவையில் யுடியூபர்களிடம் விசாரணை..!

கோவை:

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட 2 யுடியூபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த 7ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கூடுதல் டிஜிபி அருண் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் அவருக்கு தூக்கமின்மை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் டி ஐ ஜி விஜயகுமார் தற்கொலை விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்கள் பதிவு செய்த எட்டு பேருக்கு மாநகர போலீஸ் சார் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளித்திருந்தனர்.

இதில் யூடியூப் சேனலில் டிஐஜி விஜயகுமார் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலை சேர்ந்த ராஜவேல் நாகராஜ் மற்றும் இந்திய மக்கள் மன்றம் என்ற இயக்கத்தை நடத்தி வரும் வராகி ஆகிய இரண்டு பேரையும் விசாரணைக்கு ஆஜராக கூறிய நிலையில், இன்று ராமநாதபுரம் காவல் நிலையத்தில் இருவரும் ஆஜராகினர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe