மூதாட்டியிடம் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ரூ. 50 ஆயிரம் அபேஸ்..!!!

published 1 year ago

மூதாட்டியிடம் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ரூ. 50 ஆயிரம் அபேஸ்..!!!

கோவை:

கோவையில் பணம் எடுத்து தருவதாக மூதாட்டியிடம் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ரூ. 50 ஆயிரம் அபேஸ் செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை எஸ்ஐஎச்எஸ் காலனி பெத்தேல் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பழனி முருகன். இவரது மனைவி ஜெயலட்சுமி(60). இவர் கடந்த 15ம் தேதி பணம் எடுப்பதற்காக சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் உள்ள ஒரு ஏடிஎம் சென்டருக்கு சென்றார். அப்போது அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த ஒரு நபரை உதவிக்கு அழைத்தார். 

அந்த நபர் அவரிடம் ஏடிஎம் கார்டை வாங்கி ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை என கூறி மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு வேகமாக சென்று விட்டார். இதனையடுத்து ஜெயலட்சுமியும் அங்கிருந்து சென்று விட்டார். 

பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 50 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. அந்த மர்ம நபர் வேறொரு ஏடிஎம் கார்டை ஜெயலட்சுமியிடம் கொடுத்து விட்டு அவரது ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.

-----------

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe