கோவையில் ஓட்டல் ரிவ்யூ செய்தால், அதிக கமிஷன் என கூறி வாலிபரிடம் பணம் மோசடி..!

published 1 year ago

கோவையில் ஓட்டல் ரிவ்யூ செய்தால், அதிக கமிஷன் என கூறி வாலிபரிடம் பணம் மோசடி..!

கோவை: கோவையில் ஓட்டல் ரிவ்யூ செய்தால், அதிக கமிஷன் என கூறி ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் மகாத்மா நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). இவரது வாட்ஸ் ஆப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து சதீஷ்குமார் அவரது செல்போன் எண், இணையதள முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட மர்மநபர் தான் ‘மைன்ட் ஷேர் மார்க்கெட்டிங் இந்தியா’ நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டார்.

தொடர்ந்து அவர் எங்களது நிறுவன இணையதளத்தின் யூடியூப் சேனலை பின்தொடர்ந்தால் பணம் கிடைக்கும் எனவும், முதலீடு செய்ய தேவையில்லை என கூறினார். அதன்படி சதீஷ்குமார் அந்த சேனலை பின்தொடர்ந்தபோது அவருக்கு கமிஷனாக ரூ.150 கிடைத்தது.

தொடர்ந்து சதீஷ்குமாரை தொடர்பு கொண்ட அந்த நபர் ஓட்டல் ரிவ்யூ செய்தால், அதிகளவில் கமிஷன் கிடைக்கும், அதற்கு நீங்கள் சிறிது முதலீடு செய்ய வேண்டும் என ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய சதீஷ்குமார் முதலில் 2 கட்டங்களாக அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.38,386 முதலீடு செய்தார்.

இதனால் அவருக்கு கமிஷன் தொகை என 57,774 கிடைத்தது. தொடர்ந்து அவர் சிறிது, சிறிதாக ரூ.5,02,222 முதலீடு செய்தார். ஆனால், அதன்பின்னர் அவருக்கு கமிஷன் தொகை வரவில்லை. முதலீடு செய்த தொகையும் திருப்பி கிடைக்கவில்லை.

மர்ம நபர் ஆசைவார்த்தை கூறி ரூ.5,02,222 மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe