அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வழங்கும் திட்டம் துவக்கம்..!

published 1 year ago

அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வழங்கும் திட்டம் துவக்கம்..!

கோவை:கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு தன்னார்வ தொண்டு  நிறுவனங்களுடன் இணைந்து அரசு அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வழங்கும் திட்டத்தைத் துவக்கி உள்ளது. 

அதன் துவக்க நிகழ்ச்சி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் கலந்துகொண்டு இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், ல் தனியார் தொண்டு அமைப்பின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இத்திட்டத்தில் கோவை மாவட்ட நிர்வாகம், ஹெல்பிங் ஹாட்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம், புரோபெல் தனியார் அமைப்பு ஆகியவை இணைந்து அரசு அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு வீட்டில் உபயோகம் இல்லாமல் இருக்கும் விளையாட்டு பொருட்களை சேகரித்து வழங்குவர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe