கோவைக்கு வேலை தேடி வந்த வாலிபர் தற்கொலை

published 1 year ago

கோவைக்கு வேலை தேடி வந்த வாலிபர் தற்கொலை

கோவை: கோவைக்கு வேலை தேடி வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழைய கன்னிவாடியை சேர்ந்தவர் முருகன் மகன் சிவபிரகாஷ்(18). பள்ளிப்படிப்பை படித்து முடித்த இவர் வேலை தேடி கடந்த ஒருவாரத்திற்கு முன்பு கோவை வந்தார். பீளமேடு முல்லை நகர் ஹட்கோ காலனியில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் சாப்பிட்டுவிட்டு சிவபிரகாஷ் தனது அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரது கதவு திறக்கவில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பீளமேடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா? என பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe