உப்பிலிபாளையத்த்தில் அரிவாளை காட்டி பணம் பறித்த கும்பல்

published 1 year ago

உப்பிலிபாளையத்த்தில் அரிவாளை காட்டி பணம் பறித்த கும்பல்

கோவை: கோவை உப்பிலிபாளையம் வி.ஆர்.புரத்தை சேர்ந்தவர் தீபக்குமார்(21). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் பைக்கில் ஆர்.ஜி புதூரில் உள்ள மில்ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை 2 பேர் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தீபக்குமாரை மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 2 பேரும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி தீபக்குமாரிடம் இருந்த ரூ. 1200 பறித்து தப்பினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தீபக்குமார் தனது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். 

விசாரணையில், அரிவாளைக்காட்டி பணம் பறித்தது மதுரை சிம்மக்கல் கீழ அண்ணாதோப்பை சேர்ந்த கூலி தொழிலாளி கிஷோர்குமார்(24), ராமநாதபுரம் திருவொற்றியூரை சேர்ந்த அய்யப்பன்(23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe