வடவள்ளியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

published 2 years ago

வடவள்ளியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கோவை வடவள்ளி போலீசாருக்கு பஸ் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக மொபட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். 

இதனை பார்த்த போலீசார் அந்த வாலிபர்களை மடக்கிப்பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்த வாலிபர்கள் வடவள்ளியை சேர்ந்த சரத்குமார் (வயது 28) மற்றும் வேடப்பட்டியை சேர்ந்த சுரேந்தர் (22) என்பதும் தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe