கோவையில் காது கேளாத, வாய் பேச முடியாதவர்கள் விசில் ஊதி ஆர்ப்பாட்டம்

published 1 year ago

கோவையில் காது கேளாத, வாய் பேச முடியாதவர்கள் விசில் ஊதி ஆர்ப்பாட்டம்

கோவை:  ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் விசில் ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகங்கள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் காது கேளாத, வாய்ப்பேசாத மாற்றுத்திறனாளிகளை நிரந்தரமாக்க வேண்டும், அரசு பணிகளில் ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தனியார் நிறுவனங்களிலும் தங்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 

கோவையை பொறுத்தவரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விசில் ஊதியவாறு தங்களது கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு   அவர்கள் நூதனமாக ஆர்ப்பட்டம் மேற்கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe