சேரன்மாநகரில் பெண் கொலை.. கொள்ளை அடிப்பதற்காக கொலையா? போலீஸ் விசாரணை

published 1 year ago

சேரன்மாநகரில் பெண் கொலை.. கொள்ளை அடிப்பதற்காக கொலையா? போலீஸ் விசாரணை

கோவை: கோவையில் வீட்டில் படுக்கை அறையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.  கோவை சேரன்மாநகர் முருகன் வீதியை சேர்ந்த சக்கரவர்த்தி, இவரது மனைவி ஜெகதீஸ்வரி, இவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர் உள்ளார். 

வழக்கம்போல் இன்று கணவர் சக்கரவர்த்தி பெயிண்டிங் காண்ட்ராக்ட் சம்பந்தமாக அன்னூர் அருகே சென்றுள்ளார்.  இந்நிலையில் சிறுமியை  அவரது தாயார் ஜெகதீஸ்வரி காலையில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு வந்துள்ளார்.இந்நிலையில் பள்ளி முடித்தவுடன் சிறுமியை அழைத்துச் செல்ல அவரது தாயார் பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. 

இதனால் அந்த சிறுமி பள்ளியில் இருந்து வீட்டிற்கு நடந்து வந்து தனது அம்மாவை பார்த்துள்ளார்.  அப்போது தயார் அவரது அறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  இதனை அடுத்து தகவல் தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் தடையங்களை சேகரித்தனர்.

அப்போது ஜெகதீஸ்வரியை கழுத்தை நிறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அணிந்திருந்த தங்க நகைகளும் காணாமல் போனது தெரியவந்துள்ளது.  

இதனை அடுத்து உடலை கைபற்றிய போலீசார் ,கொலை செய்துவிட்டு நகை பணத்தை திருடி சென்றுள்ளனரா? என்ற கோணத்தில்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe