காந்திபுரத்தில் டிபன் கடைக்காருக்கு மிரட்டல்

published 1 year ago

காந்திபுரத்தில் டிபன் கடைக்காருக்கு மிரட்டல்

கோவை : கோவையில் கத்திமுனையில் டிபன் கடைக்காரரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையை சேர்ந்தவர் மகேந்திரன்(43). இவர் காந்திபுரம் கோகலே தெருவில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.

 நேற்று மகேந்திரன் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் 3 பேர் வந்தனர். அதில் இருந்து இறங்கி வந்த ஒருவர் மகேந்திரனிடம் தியேட்டருக்கு செல்வது எப்படி? என வழி கேட்டார். அவர் முகவரி சொல்லிக்கொண்டிருக்கும் போது அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகேந்திரனின் கழுத்தில் வைத்து பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் செல்போனை பறித்து விட்டு 3 பேரும் பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து மகேந்திரன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கத்தி முனையில் செல்போன் பறித்து சென்றது கோவை நல்லாம்பாளையம் சபரி கார்டனை சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்திகேயன்(26), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி விவேக்(25), கோவை செங்காட்டை சேர்ந்த பரணிகுமார்(23) என்பது தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe