கணுவாய் அருகே பேக்கரிக்குள் நுழைந்து அரிவாள் வெட்டு- கடையை சூறையாடி சென்ற நபர்கள்...

published 3 hours ago

கணுவாய் அருகே பேக்கரிக்குள் நுழைந்து அரிவாள் வெட்டு- கடையை சூறையாடி சென்ற நபர்கள்...

கோவை: கோவை கணுவாய் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் வசித்து வருபவர் சுபாஷ். இவர் அகில பாரத இந்து மகா சபா தேசிய ஒருங்கிணைப்பளராக செயலாளராகவும் உள்ளார். இவர் பன்னிமடை, கணுவாய், சோமையம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் ஹோட்டல் மற்றும் பேக்கரி வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு பன்னிமடையில் உள்ள அவரது ஹோட்டலில் இருந்த போது காரில் மாஸ்க் அணிந்து வந்த 3 பேர் திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சுபாஷ் தாக்கியுள்ளனர். இதில் கை, கால் மற்றும் இடுப்பு பகுதியில் லேசான காயமடைந்த சுபாஷ் ஹோட்டலுக்கு சென்று தப்பினார்.

 

அவரை காப்பாற்ற வந்த பார்த்திபன் என்பவரையும் அவர்கள் அரிவாலால்  தாக்கியதில் கையில் லேசான காயம் ஏற்பட்டது. தொடந்து அவர்கள் அங்கிருந்த கார், ஹோட்டலின் கண்ணாடி மற்றும் சாம்பார், சட்னி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தடாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் சுபாஷ் உள்ளிட்ட இருவரை அரிவாலால் தாக்கி காயப்படுத்தி ஹோட்டலை சூரையாடியது. துடியலூர் அருகே உள்ள வி.எஸ்.கே. நகர் பகுதியில் கார் கன்சல்டன்ஸி நடத்தி வரும்  அருண் மற்றும் அவரது நண்பர்கள் தனஞ்செயன், அழகர் உள்ளிட்டவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe