கோவை ராமநாதபுரத்தில்  ஐஸ்கிரீம் கடையில்  திருடிய வாலிபர்..! 

published 1 year ago

கோவை ராமநாதபுரத்தில்   ஐஸ்கிரீம் கடையில்  திருடிய வாலிபர்..! 

கோவை: கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டா புரத்தைச் சேர்ந்தவர் ஹரிஹர பாண்டியன்(38). இவர் கோவைப்புதூரில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 27ம் தேதி வழக்கம்போல வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலையில் கடை திறக்க வந்தார். 

அப்போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ. 1400 ஐ காணவில்லை. மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். இது குறித்து ஹரிஹர பாண்டியன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் பணத்தைத் திருடிச் சென்றது குனியமுத்தூர் பிகே புதூரை சேர்ந்த ஷிகாபுதீன்(19) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து ரூ. 1000 பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe