கோவையில் இரும்பு வியாபாரியை தாக்கிய கல்லூரி மாணவர்கள் கைது

published 1 year ago

கோவையில் இரும்பு வியாபாரியை தாக்கிய கல்லூரி மாணவர்கள் கைது

கோவை: கோவையில் இரும்பு வியாபாரியை தாக்கிய கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி (54). இவர் இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு அஞ்சுகம் நகரில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றனர். அப்போது அங்கு வந்த கும்பல் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் இரும்பு வியாபாரி அந்தோணி சாமியை செல்போனில் தொடர்புகொண்டு தங்களிடம் சிலர் தகராறு செய்வதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்தோணிசாமி தனது மகனை அழைத்து கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது அந்தோணி சாமிக்கும், அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த 3 பேர் கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி அந்தோணி சாமியை தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து அந்தோணிசாமி சரவணம்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், அந்தோணிசாமியை தாக்கியது கோவை கணபதி ராஜீவ்காந்தி ரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவர் பென்னிகின் (18), கணபதி காமராஜபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சரவணகுமார் (19), ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் உட்பட 7 பேர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் பென்னிகின், சரவணகுமார், 16 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தாக்குதல் நடத்திய மற்ற 4 பேர் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

13வது கனெக்ஷன் விளையாட்டுக்கான விடை

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe