கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் 25 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்

published 1 year ago

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் 25 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்

கோவை : கோவை காந்திபுரத்தில் மாநகர பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தது. 

இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் வந்தது. 

புகாரின் பேரில், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில், மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் மாநகர பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டீக்கடை, செல்போன் கடை, செருப்பு கடை உள்பட 25 கடைகளை அகற்றினர் . 

இதனையொட்டி அங்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது காந்திபுரம் மாநகர பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த 25 கடைகள் அகற்றப்பட்டது. 

தொடர்ந்து அங்கு மீண்டும் கடைகள் வைக்காதவாறு கண்காணிக்கப்படும். நடைபாதை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கடைகள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe