கோவையில் கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது

published 1 year ago

கோவையில் கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 4 பேர் கைது

கோவை : கோவை போத்தனூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுந்தராபுரம் ஓம் சக்தி கோயில் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

 அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். சோதனை செய்த போது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த பண்டாரமுத்து(24), செல்வகண்ணன்(19), சுந்தராபுரம் கணேசபுரத்தைச் சேர்ந்த அறிவழகன்(22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். 

பின்னர் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe