மேகதாது அணை.. 60 நாட்களில் கணக்கெடுப்பை முடிக்கிறது கர்நாடகா.!

published 1 year ago

மேகதாது அணை.. 60 நாட்களில் கணக்கெடுப்பை முடிக்கிறது கர்நாடகா.!

தமிழ்நாடு: கர்நாடக மாநிலத்தில் புதிதாகக் கட்டவிருக்கும் அணை மேகதாதுவில் வனப்பகுதியில் 2 கிலோ மீட்டர் பரப்பளவைக் கர்நாடக அரசு அளந்து ஆய்வு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வானிலை நன்றாக இருந்தால் 60 நாட்களில் எண்ணி அளந்து முடித்துவிடுவோம் எனக் கர்நாடக அதிகாரிகள் கூறுகின்றனர். கர்நாடகா எங்கே முடிகிறது, தமிழ்நாடு எங்கே தொடங்குகிறது என்பதைக் காட்ட ஒவ்வொரு 20 மீட்டாருக்கும் கர்நாடக வனத்துறை மரத்துண்டுகள் நட்டு வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக அரசு புதிதாகக் கட்டவிருக்கும் மேகதாது அணைக்குத் தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வனப்பகுதியில் கர்நாடக அரசு ஆய்வு மேற்கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஆகஸ்ட் 11ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. கர்நாடகா அரசு  தர வேண்டிய நீரைத் திறந்து விடாததால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தைக் கூட்ட, தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்த நிலையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe