கோவையில் ஓடும் பேருந்தில் ரூ. 60 ஆயிரம் திருட்டு

published 1 year ago

கோவையில் ஓடும் பேருந்தில்  ரூ. 60 ஆயிரம் திருட்டு

கோவை : கோவையில் ஓடும் பேருந்தில் வாலிபரிடம் ரூ. 60 ஆயிரம் திருடிய ஆட்டோ டிரைவரை காவல்துறை கைது செய்தனர்.

கோவை எட்டிமடை ஹரிசந்திரபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(42). வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது நண்பர் ஒருவருடன் பேருந்தில் ஆர்.புரம் சென்று கொண்டிருந்தார். 

அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்ம நபர் விஜயகுமாரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த ரூ. 60 ஆயிரத்தைத் திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். 

உடனே சுதாரித்த விஜயகுமார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரைப் பிடித்து ஆர்.எஸ்.புரம் காவல்துறை நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் ஓடும் பேருந்தில் அப்படிச் செய்தது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி(47) என்பது தெரியவந்தது. காவல்துறை அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 60 ஆயிரம் மீட்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe