கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது எனத் தொழிலாளிக்கு மிரட்டல்

published 1 year ago

கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது எனத் தொழிலாளிக்கு மிரட்டல்

கோவை: கொலை வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது எனத் தொழிலாளியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு ஒரு கொலை நடந்தது. இக்கொலை வழக்கில் பீளமேடு பாரதி காலணி 2வது தெருவை சேர்ந்த தொழிலாளி சஞ்சீவ்குமார் (25) என்பவர் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்தார். கொலை தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே இந்த கொலையில் சாட்சி சொல்லக்கூடாது என சஞ்சீவ்குமாருக்கு அடிக்கடி மிரட்டல் வந்துள்ளது. இந்நிலையில், நேற்று சஞ்சீவ்குமார் தனலட்சுமி நகர் ரேஷன் கடை அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சஞ்சீவ்குமாரிடம் நீ இந்த வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது, அதனை மீறிச் செயல்பட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சஞ்சீவ்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், சஞ்சீவ்குமாரை மிரட்டியது கணபதி மூர் மார்க்கெட் பகவத் சிங் தெருவைச் சேர்ந்த தீனா (எ) தீனதயாளன் (28) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe