கோவையில் காதலிக்க மறுத்த பெண்ணை தகாத வார்த்தையில் திட்டி மிரட்டல் விடுத்த  வாலிபர் கைது

published 1 year ago

கோவையில் காதலிக்க மறுத்த பெண்ணை தகாத வார்த்தையில் திட்டி மிரட்டல் விடுத்த  வாலிபர் கைது

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். பிஎஸ்சி ஐடி படித்துள்ளார். 

இவர் மேட்டுப்பாளையம் பாரதி நகரைச் சேர்ந்த பிரதீப்(28) என்பவரைக் காதலித்தார். நாளடைவில் பிரதீப் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அதனை மறைத்து தன்னை காதலிப்பது இளம்பெண்ணுக்குத் தெரியவந்தது. இதனால் இளம்பெண் பிரதீப்புடன் பழகுவதையும், பேசுவதையும் முற்றிலும் தவிர்த்துவிட்டார்.

 ஆனால் பிரதீப் தொடர்ந்து இளம்பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து இளம்பெண் பிரதீப் மீது குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் புகாரைப் பதிவு செய்தனர். இதனால் பிரதீப் இளம்பெண் மீது ஆத்திரத்தில் இருந்தார். இந்நிலையில், நேற்று குனியமுத்தூரில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த பிரதீப் தகாத வார்த்தைகளாப் பேசி இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தார். இது குறித்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் பிரதீப் மீது மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe