போலீசாரின் மனைவிகளுக்குத் தொழில் பயிற்சி வழங்கிய மாவட்ட தொழில் மையம்

published 1 year ago

போலீசாரின் மனைவிகளுக்குத் தொழில் பயிற்சி வழங்கிய மாவட்ட தொழில் மையம்

கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்குக் கோவை மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறு தொழில் பயிற்சி வழங்கப்பட்டது.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்தினரைத் தொழில்முனைவோராக்கும் முயற்சியாக சுய தொழில் பயிற்சி முகாம் கோவை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்ட தொழில் மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொழிற் பயிற்சி வழங்கும் வல்லுநர் சரஸ்வதி ஈஸ்வரன், ஃபேம் டி.என் மாவட்ட அலுவலர் சாந்த ஷீலா, மற்றும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு தொழில் பயிற்சிகளை வழங்கியதோடு, தொழில் நடத்துவதற்கான கடன் பெறுவது எப்படி என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த முகாமில்   ஊறுகாய், ஜாம், ஐஸ்கிரீம், சாக்லேட், குழந்தைகளுக்குத் தேவையான உணவுகள், சூப் பவுடர் உற்பத்தி என முழுமையாகச் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிப்பது, அதை சந்தைபடுத்துவது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்த பயிற்சி முகாமில் போலீசார் மற்றும் போலீசாரின் குடும்பத்தினர் என 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முகாமின் ஒரு பகுதியாகத் தொழில் முனைவோர் தயாரித்த உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது, இதனை போலீசாரின் குடும்பத்தினர் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.

இந்த முகாமில் காவல்துறை உதவி ஆணையர் சேகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe