டான்ஸ் மாஸ்டரிடம் செல்போன், பணம் பறித்த வாலிபர் கைது

published 1 year ago

டான்ஸ் மாஸ்டரிடம் செல்போன், பணம் பறித்த வாலிபர் கைது

கோவை : கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் வினோத்(35). டான்ஸ் மாஸ்டர். இவர் நேற்று ஆர்.எஸ்.புரம் லோகமான்யா தெருவில் உள்ள நடனபள்ளியில் தனது பேக்கை வைத்துவிட்டு அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். 

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது பேக்கை காணவில்லை. அதில் ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான ஐபோன் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் இருந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த வினோத் அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது வாலிபர் ஒருவர் அவரது பேக்கை திருடி கொண்டு ஓடினார். அவரை நண்பர்கள் உதவியுடன் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 விசாரணையில், செல்போன், பணம் திருடியது வேடப்பட்டி நாகராஜபுரம் 2வது தெருவை சேர்ந்த பெயிண்டர் முத்துக்குமார்(36) என்பது தெரியவந்தது. ஆர்.எஸ்.புரம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe