கோவையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பலி

published 1 year ago

கோவையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பலி

கோவை : கோவை சூலூர் கண்ணம்பாளையம் பிரிவைச் சேர்ந்தவர் சதீஷ்பாபு(48). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், இவரது மனைவி வித்யாவுக்கும் விவாகரத்தானது. சதீஷ்பாபு தனியாக வசித்து கூலி வேலைக்குச் சென்று வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் அவர் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. 

கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இந்நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவில் நியூ சித்தாபுதூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி சாக்கடை கால்வாயில் விழுந்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe